Monday 16 July 2018

வாழ்வியல் இலக்கியப் பொழில் 23-06-2018-ல் 8 ஆவது சந்திப்பு

"வாழ்வியல் இலக்கியப் பொழில்" அமைப்பபின் மாதாந்திர நிகழ்ச்சி (23-08-2018 அன்று 8 ஆவது நிகழ்ச்சி)

இலக்கிய உறவுகளுக்கு இனிய வணக்கம்,

சிராங்கூன் சமூக மன்றத்தில் 23-06-2018 மாலை 6.00 மணிக்கு வாழ்வியல் இலக்கியப் பொழில் அமைப்பின் மாதாந்திர நிகழ்ச்சி....

தமிழ் வணக்கப் பாடலோடு வரவேற்பு தமிழன்னைக்கு. தாம் தாம் தித்தாம்... என்றதொரு இசைக்கு பரதநாட்டியம் ஆடி நிகழ்ச்சியை தொடங்கி வைத்தார் சிவானி. முத்தை தரு பக்தி ... என்ற திருப்புகழ் பாடலை இசைபாடிச் சென்றார் பிரஷிதா.
வந்தோரை வரவேற்று மகிழ்ந்தார் திருமதி உஷா கிருஷ்ணமூர்த்தி. சிறுவர்கள் பங்கேற்கும் அங்கத்தை ஒரு அழகிய கதையுடன் தொடங்கி வைத்தனர் நெறியாளர்கள் திரு.கலியபெருமாள் மற்றும் திரு.கார்த்திக்.

முதலாவதாக சமஸ்திகா ஓடி விளையாடு பாப்பா என்ற பாரதியார் கவிதையை பாடிச்சென்றார். தொடர்ந்து வந்த ஜோஷிகா, நண்பர்களிடம் எப்படி நட்போடு பழக வேண்டும் என்பதை ளறும்பும் புறாவும் அழகியதோர் நன்னெறிக் கதையைக் மூலம் விளக்கினார்.

வழக்கம் போல் காணொளி வழியாக வந்த ஶ்ரீயா பாரதிதாசன் இயற்றிய மொழிவாழ்த்து பாடலை அழகுறப் பாடினார். பள்ளி விடுமுறையில் தாயகம் சென்றுள்ள தனீஷ்ராஜ் மனதில் உறுதிவேண்டும் என்ற பாரதியார் பாடலோடு வந்தார் காணொளி வழியாக.

அடுத்து வந்த அஸ்வின் எறும்பும் புறாவும் கதையோடு வந்தார். மழலைப் பாடலோடு வந்தார் நிக்கிதா. தேடிச் சென்று தினம் தின்று என்ற பாரதியார் வரிகளுடன் வந்தார் கமலிகா. காக்கை சிறகினிலே என்ற பாரதியார் பாடல் வரிகளை வழங்கினார் சர்வினி.

மூதுரை செய்யுள்களோடு வந்தார் சந்தோஷ்குமார். பாரதியார் பாடலோடு வந்தார் ஶ்ரீஹரி. சொர்கமும் நரகமும் கதையோடு வந்தார் பிரதஷிணா. தமிழகம் சென்றுள்ள நிதீஷ்ராஜ் ஆசாரக் கோவை பாடல்கள் பற்றி அழகுற விளக்கினார் காணொளி வழியாக. திருக்குறள் கதையைக் கூறிச் சென்றார் வாசினி. சங் க இலக்கியத்தில் வரும் 99 மலர்களின் பெயர்களை கூறிச்சென்றார் ஜீவஜோதிகா. நாலடியார் வரிகளோடு வந்தார் சம்ரிதா.

சிறுவர்கள் அங்கத்தை தொடர்ந்து வந்த வாழ்வியல் இலக்கியப் பொழிலின் தலைவர் பாவலர் எல்ல.கிருஷ்ணமூர்த்தி, தமது அறிமுக உரையில்சங்க இலக்கியத்தில் கடல்என்னும் தலைப்பில் புறநானூறு மற்றும் சீவக சிந்தாமணி பாடல்களை மேற்கோள்காட்டி வழங்கினார். சங்க கால நூல்களின் மீது ஏற்பட்ட காதல் பற்றி நெறியாளர் கேட்ட கேள்விக்கு பதிலளித்தவர் தமது இலக்கியப் பயணத்தை தெளிவுற வழங்கினார்.

சிறு இடைவேளைக்குப் பின் தொடங்கியவேரும் விழுதும்என்ற புதிய அங்கத்தில் திருமதி. பவித்ரா மற்றும் அவருடைய புதல்வி அன்யா சேர்ந்து நாலும் இரண்டும் சொல்லுக்குறுதி என்ற வரியின் மூலமான திருக்குறள் மற்றும் நாலடியார் பற்றி தொடங்கி, நாலடியார் பாடல்களை வழங்கினர்.

பெரியவர்கள் உரையில், திருமதி.உஷா கிருஷ்ணமூர்த்தி குறிஞ்சி திணைப் பற்றி சிற்றுரை வழங்கினார். தொடர்ந்து வந்த திருமதி.மஞ்சுளா இனியவை நாற்பது நூலில் இருந்து சில பாடல்களை விவரித்தார். முதுமொழிக்காஞ்சி நூலில் இருந்து பொய்யாப்பத்து அதிகாரத்தில் வந்த பாடல்களை பற்றி சிற்றுரையாற்றினார்.  நான்மணிக்கடிகை நூலில் இருந்து சில பாடல்களை விளக்கி உரையாற்றினார் திருமதி. ராதிகா. சங்க இலக்கியத்தில் கல்வி என்னும் தலைப்பில் சிற்றுரை வழங்கினார் திருமதி.துளசிமணி.

வழக்கமான மருந்துவ குறிப்புகளுடன் வந்திருந்த கவிஞர் சாவித்திரி. நன்றியுரை வழங்கிய திருமதி.அனுராதா சுரேஷ் மறவாமல் யாவரையும் மனதார நினைவுகூர்ந்தார். தொடக்கம் முதல் கலந்துரையாடல்கள் மூலம் இடையிடையே குறிப்புகள், கதைகள், வினா விளக்கம் என பல்வேறு வகையில் அழகுற நிகழ்ச்சியை நெறிப்படுத்தி சென்றனர் திரு.கலியபெருமாள் மற்றும் திரு.கார்த்திக்.

தமிழில் பிறந்தாள் வாழ்த்து பாடல் பாடி இந்த மாதம் பிறந்தநாள் குழந்தைகளை மேடையேற்றி வாழ்த்துகளை தெரிவித்ததோடு நிகழ்ச்சி முடிவுக்கு வர, இனிமையாக தமிழ்க் குடும்பங்கங்கள் பல, கலந்துகொண்ட நிகழ்ச்சி இரவு சிற்றுண்டியுடன் இனிதே நிறைவுற்றது.

வாழ்வியல் இலக்கியப் பொழில் -  8 ஆவது சந்திப்பு 23-06-2018 நிகழ்ச்சியின்....
புகைப்படங்களுக்கான இணைப்பு கீழே:
https://photos.app.goo.gl/Bnyyog2Gh9x3wUf59

காணொளியை இணையத்தில் காண இணைப்பு கீழே.
You tube link:
https://youtu.be/yKNJMtt5iJM

வலைப்பதிவிற்காண இணைப்பு கீழே:
www.vazhviyalilakkiyapozhil.blogspot.com

முகநூல் பயன்படுத்துவோர் கீழ்கண்ட இணைப்பில் தங்களை இணைத்துக்கொள்ள வேண்டுகிறோம்.
http://www.facebook.com/vazhviyalilakkiyapozhil.sg
First name: Vazhviyal Ilakkiya
Last name: Pozhil Singapore

மேற்கண்ட இணைப்பில் சிரமம் இருப்பின் Krishnamurthy Singapore என்ற இணைப்பில் இணைக்க விருப்பம் தெரிவிக்க இணைக்க ஏதுவாக இருக்கும்.
நன்றி !

மரபுடன்,

பாவலர் எல்ல.கிருஷ்ணமூர்த்தி
வாழ்வியல் இலக்கியப் பொழில்
சிங்கப்பூர்

No comments:

Post a Comment