Wednesday 14 February 2018


"வாழ்வியல் இலக்கியப் பொழில்" 13-02-2018-ல் மஹா சிவராத்திரி கலைநிகழ்ச்சி 2018.

"வாழ்வியல் இலக்கியப் பொழில்" அமைப்பின் முதல் கலை நிகழ்ச்சி (13-02-2018 அன்று மஹா சிவராத்திரி கலைநிகழ்ச்சி 2018)


இலக்கிய உறவுகளுக்கு இனிய வணக்கம்,


சிராங்கூன் நார்த் அவின்யூ 1-ல் இருக்கும் தரும முனீஸ்வரன் ஆலயத்தில் 13-02-2018 இரவு 9.00 மணிக்கு வாழ்வியல் இலக்கியப் பொழில் அமைப்பின் மஹா சிவராத்திரி கலைநிகழ்ச்சி 2018 தொடங்கியது. "லிங்கோஷ்டகம்" பாடினார் ரக்ஷிகா. தொடர்ந்து வந்த நந்திதா "ஊருகாமல் இருக்காதய்யா...." எனும் அழகியதோர் சங்கீதப் பாடலை பாடினார். தேவாரக் குழுவினர் தேவார பாடல்கள் பாடினர்.


சிறுவர்கள் பங்கேற்ற அங்கத்தில் முதலாவதாக வந்த சுசித்திரா, சிவராத்திரி பற்றியக் கதை ஒன்றை கூறினார். தொடர்ந்த சர்வினி தனது சிற்றுரையில் தனக்கு தெரிந்த திருமூலர் இயற்றியத் திருமந்திர பாடலான "சிவசிவ என்கிலர்...." பாடி பொருளும் கூறினார். சிவராத்திரி என்றால் என்ன ? என்ற ஒரே தலைப்பில் பல சிற்றுரைகளை ஆற்றிய மாணவர்கள் தன்யா, ரிஷிகணேஷ், தேசிகராஜன் மற்றும் கிஷோர் பல பயனுள்ள அரியத் தகவல்களை சுவைபட வழங்கினர்.


பெரியவர்கள் வழங்கிய உரையில் திருமதி பவித்ரா கண்ணன் "முக்தி தரும் சிவராத்திரி" என்ற தலைப்பில் உரையாற்றினார். இறுதியாக வந்த வாழ்வியல் இலக்கியப் பொழில் அமைப்பின் ஒருங்கிணைப்பாளர் திரு எல்ல.கிருஷ்ணமூர்த்தி மஹா சிவராத்திரி நன்னாளில் ஓத வேண்டியச் சில பதிகங்களைப் பாடி நிகழ்ச்சியை நிறைவு செய்துவைத்தார்.


ஆலய மேலாண்மைகுழுவினர், நிகழ்ச்சியில் பங்கேற்ற அனைவருக்கும் அன்பளிப்பு அளிக்க கலைநிகழ்ச்சி இனிதே நிறைவுற்றது.



வாழ்வியல் இலக்கியப் பொழில் -  மஹா சிவராத்திரி கலைநிகழ்ச்சி 2018

13-02-2018 நிகழ்ச்சியின்....

புகைப்படங்களுக்கானணைப்பு கீழே:

https://photos.app.goo.gl/mbu2KTMbuVMQSHAh1


காணொளியை இணையத்தில் காண ணைப்பு கீழே.




வலைப்பதிவிற்காண இணைப்பு கீழே:

www.vazhviyalilakkiyapozhil.blogspot.com



முகநூல் பயன்படுத்துவோர் கீழ்கண்ட இணைப்பில் தங்களை இணைத்துக்கொள்ள வேண்டுகிறோம்.

http://www.facebook.com/vazhviyalilakkiyapozhil.sg

First name: Vazhviyal Ilakkiya

Last name: Pozhil Singapore


மேற்கண்ட இணைப்பில் சிரமம் இருப்பின்

Krishnamurthy Singapore என்ற இணைப்பில் இணைக்க விருப்பம் தெரிவிக்க இணைக்க ஏதுவாக இருக்கும்.


நன்றி !


மரபுடன்,

பாவலர் எல்ல.கிருஷ்ணமூர்த்தி

வாழ்வியல் இலக்கியப் பொழில்

சிங்கப்பூர்

No comments:

Post a Comment