Monday 16 July 2018

வாழ்வியல் இலக்கியப் பொழில் 14-07-2018-ல் 9 ஆவது சந்திப்பு

"வாழ்வியல் இலக்கியப் பொழில்" அமைப்பபின் மாதாந்திர நிகழ்ச்சி (14-07-2018 அன்று 9 ஆவது நிகழ்ச்சி).

சிராங்கூன் சமூக மன்றத்தில் 14-07-2018 மாலை 6.00 மணிக்கு வாழ்வியல் இலக்கியப் பொழில் அமைப்பின் மாதாந்திர நிகழ்ச்சி....

வாழ்க நிரந்தரம் என்ற தமிழ் வணக்கப் பாடலோடு வரவேற்பு தமிழன்னைக்கு. நம்பி கெட்டவர் எவரைய்யா...என்றவொரு பக்தி பாடலோடு நிகழ்ச்சியை தொடங்கி வைத்தார் சிவானி.
மாலைப்பொழுதில் இலக்கியப் பொழிலில் இளைப்பாற வந்தோர் யாவரையும் வரவேற்று மகிழ்ந்தார் மருத்துவர் திருமதி அன்னபூரணி.
சிறுவர்கள் பங்கேற்கும் அங்கத்தை, தமிழர்கள் கல்வியோடு ஒழுக்கத்தையும் கற்கிறார்கள் என்ற  நெகிழ்வான கருத்தை அமெரிக்காவில் முன்னாள் ஒபாமா அவர்கள் பங்கேற்ற கலந்துரையாடல்கள் நிகழ்ச்சியில் நடந்த அனுபவத்தைக் கூறி தொடங்கி வைத்தனர் நெறியாளர்களாக வந்த தகவல் தொழில்நுட்ப பொறியாளர்கள் திரு.கலியபெருமாள் மற்றும் திரு.கார்த்திக்.
நன்றி ஒருவருக்கு செய்தக்கால்என்றதொரு மூதுரைப் பாடலுடன் விளக்கத்தை வழங்கியனார் சர்வினி. அடுத்து வந்த சமஸ்திகா காக்கைச் சிறகினிலேஎன்ற பாரதியார் கவிதையை பாடிச்சென்றார். தொடர்ந்து வந்த ஜோஷிகா, ஓடி விளையாடு பாப்பா என்ற பாரதியார் அழகியப் பாடலை பாடினார்.
தண்டலை மயில்கள் ஆட என்ற அழகிய கம்பராமாயணப் பாடல் வரிகளைப் பாடியும் பொருள் கூறியும் வழங்கிச் சென்றார் ஜீவஜோதிகா. கண்ணகி வழக்குரையாடல் என்ற தலைப்பில் அழகுற வாதிட்டார் கமலிகா.
தொடர்ந்து வந்த கௌசிகா கோகுல் பூட்டைத் திறப்பது கையாலே என்ற பாரதியார் பாடலை அழகுறப் பாடினார்.
வழக்கம் போல் காணொளி வழியாக வந்த ஶ்ரீயா திருநாவுக்கரசர் இயற்றிய தேவாரப்பாடல் நாமர்க்கும் குடியல்வோம் நமனையஞ்சோம்பாடலை அழகுறப் பாடினார்.

அடுத்து வந்த ஶ்ரீஜா, “எண்ணெழுத்து இகழேல்என்ற ஆத்திச்சூடிக் கதையைக் கூறினார்.
அடுத்து வந்த அஸ்வின் நேர்மையான விறகுவெட்டிஎன்ற நன்னெறிக் கதையைக் கூறினார். மனதில் உறுதி வேண்டும் என்ற பாரதியார் பாடலைச் சுவைபட பாடினார் ஶ்ரீஹரி. தேவைக்கேற்ப தேவைப்படுவனவற்றை மட்டும் பேசவேண்டும் என்றதொரு கருத்தை வலியுறுத்தும் கதையாக ஆமையும் கொக்கும்என்ற தலைப்பில் நன்னெறிக் கதையை வழங்கினார் பிரித்தீவ். அடுத்து வந்த சந்தோஷ்குமார் மூதுரை நூலில் வந்த கடவுள் வாழ்த்துப் பாடலான வாக்குண்டாம் நல்ல மணமுண்டாம் என்றப் பாடலை அழகுறப் பாடிச் சென்றார்.

உலக நீதிச் செய்யுள் ஓதாமல் ஒருநாளும் இருக்க வேண்டாம் என்ற செய்யுட் பாடலை வழங்கிச் சென்றார் தாட்சாயணி. ஆத்திச்சூடி வழங்கிச்சென்றார் கிருஷவ். தொடர்ந்து வந்த நந்திகா சின்னஞ்சிறு கிளியே கண்ணம்மா என்ற அழகியப் பாடலையும் பாரதியார் பற்றிய சிறிய அறிமுகத்தையும் தமது இனியக் குரலால் பாடினார்.

தொடர்ந்து வந்த விமல் விவேக சிந்தாமணி பாடல் ஒப்புடன் முகம் மலர்ந்தேஎன்று தொடங்கும் விருந்தோம்பல் எவ்வாறு இருக்க வேண்டும் வலியுறுத்தும் பாடலை வழங்கினார்.
அடுத்து வந்த தனீஸ்ராஜ் பழமொழி கூடிவாழ்ந்தால் கோடி நன்மை என்பதற்கேற்ப நல்லதொரு கதையைக் கூறினார்
பௌசல் ஹினயா வழங்கிய சிந்தனைப் பேச்சில் பொழுதுபோக்கினால் ஏற்படும் நன்மைகள் பற்றி சிற்றுராற்றினார். தொடர்ந்து வந்த சலீம் ஸாபர் பேராசை பெரு நஷ்டம் என்ற தலைப்பில் நல்லதொரு கதையை வழங்கிச் சென்றார்.

சிறுவர் அங்கத்தினைத் தொடர்ந்து வந்த அமைப்பின் தலைவர் பாவலர் எல்ல.கிருஷ்ணமூர்த்தி தமிழிசை என்ற தலைப்பில் பாவினங்களின் வகைகளையும் அவற்றுள் வெண்பா, ஆசிரியப்பா, கலிப்பா மற்றும் வஞ்சிப்பா போன்ற பாக்களை எந்தெந்த சூழ்நிலைகளில் அரங்கேற்றம் செய்யப்படும் என்பதை விவரித்தார். நெறியாளர் கேட்ட கேள்விக்கு பதிலளித்தவர் அக்கால மன்னர்கள் யாவரும் தமிழின் தொன்மைகளை அறிந்திருந்தனர் என்றும் இக்கால தலைமைப்பொறுப்பில் உள்ளவர்கள் பாமரனும் புரிந்துகொள்ளும் வகையில் எழுதிய புதுக்கவிதையைக் கூட புரிந்துகொள்ளாத நிலையிலேயே தான் இருக்க காரணம் தமிழர்களாககிய நாம் நீர்த்துப் போன தமிழையேப் பருகிவருகின்ற காலமிது என்று வருந்தினார்.
சிறு இடைவேளைக்குப் பின் தொடங்கிய வேரும் விழுதும்என்ற புதிய அங்கத்தில் திருமதி. எழிலரசி மற்றும் அவருடைய புதல்வி கவின்நிலா சேர்ந்து திருவிளையாடல் படக்காட்சியை மிகவும் தத்ரூபமாக வழங்கி அரங்கினரை உற்சாகமூட்டினர்.
இரண்டாவது படைப்பாளிகளாக வந்த இரட்டையர் திருமதி துளசிமணி மற்றும் அவருடைய புதல்வி சம்ரிதா பழமொழி நானூறு வழங்கி விடுகதையோடு புதிர்போட்டனர்.


பெரியவர்கள் உரையில், திருமதி.மஞ்சுளா திரிகடுகம் நூலில் இருந்து சில பாடல்களை விவரித்தார். தொடர்ந்து வந்து,

முதுமொழிக்காஞ்சி நூலில் இருந்து சிறந்தப்பத்து அதிகாரத்தில் வந்த பாடல்களை பற்றி சிற்றுரையாற்றினார் திருமதி.தீபிகா.

நான்மணிக்கடிகை நூலில் இருந்து சில பாடல்களை விளக்கி உரையாற்றினார் திருமதி. ராதிகா. சேரன் பேச்சாளர் மன்ற முன்னாள் தலைவர் கவிஞர் உ.செல்வராஜூ இலக்கு என்ற தலைப்பில் தமது மன்ற இலக்கை எவ்வாறு சாத்தியப்படுத்தினார் என்பதையும் குழந்தைகளுக்கு லட்டு என்ற தலைப்பில் கவிதை வழங்கியும் சிறப்பித்தார். சிறப்புரை வழங்க தமிழகத்தில் இருந்து வருகை புரிந்துள்ள  அமைப்பின் தலைவர் அவர்களுடைய தந்தை பூ.எல்லப்பன் அவர்கள் இந்நிகழ்வு பற்றிய தமது அனுபவத்தையும் சில அறவுரைகளையும் மாணவர்களுக்கு அறிவுரைகளையும் வழங்கி சிறப்பித்தார்.

வழக்கமான மருந்துவ குறிப்புகளுடன் வந்திருந்த கவிஞர் சாவித்திரி. பிஸியோதெரபி நிபுணர் பெண்களுக்கான இயக்குமுறை பயிற்சிகளை காணொளி வழியாக விளக்கிய விதம் அருமை. பலருக்கும் உதவியாக இருக்கும் என்பதில் ஐயமில்லை.

நன்றியுரை வழங்கிய திருமதி.தேவிபாலா கலியபெருமாள் மறவாமல் யாவரையும் மனதார நினைவுகூர்ந்து நன்றியுரைத்தால். தொடக்கம் முதல் கலந்துரையாடல்கள் மூலம் இடையிடையே குறிப்புகள், கதைகள், வினா விளக்கம் என பல்வேறு வகையில் அழகுற நிகழ்ச்சியை நெறிப்படுத்தி சென்றனர் திரு.கலியபெருமாள்

மற்றும் திரு.கார்த்திக். இவர்களுக்கிடேயான உரையாடல் அனைவருடைய கவனத்தையும் ஈர்த்து கடைசிவரை கலகலப்பாக நிகழ்ச்சியை கொண்டுசென்ற விதம் மிக அருமை.

தமிழில் பிறந்தாள் வாழ்த்து பாடல் பாடி இந்த மாதம் பிறந்தநாள் குழந்தைகளை மேடையேற்றி வாழ்த்துகளை தெரிவித்ததோடு நிகழ்ச்சி முடிவுக்கு வர, இனிமையாக தமிழ்க் குடும்பங்கங்கள் பல, கலந்துகொண்ட நிகழ்ச்சி இரவு சிற்றுண்டியுடன் இனிதே நிறைவுற்றது.


வாழ்வியல் இலக்கியப் பொழில் -  9 ஆவது சந்திப்பு 14-07-2018 நிகழ்ச்சியின்....

புகைப்படங்களுக்கான இணைப்பு கீழே:
https://photos.app.goo.gl/oKqP3wgtpYFCwt3d7

காணொளியை இணையத்தில் காண இணைப்பு கீழே.
You tube link:
https://youtu.be/nBIWb6WAV0U

வலைப்பதிவிற்காண இணைப்பு கீழே:
www.vazhviyalilakkiyapozhil.blogspot.com


முகநூல் பயன்படுத்துவோர் கீழ்கண்ட இணைப்பில் தங்களை இணைத்துக்கொள்ள வேண்டுகிறோம்.
http://www.facebook.com/vazhviyalilakkiyapozhil.sg
First name: Vazhviyal Ilakkiya
Last name: Pozhil Singapore

மேற்கண்ட இணைப்பில் சிரமம் இருப்பின்
Krishnamurthy Singapore என்ற இணைப்பில் இணைக்க விருப்பம் தெரிவிக்க இணைக்க ஏதுவாக இருக்கும்.

நன்றி !
மரபுடன்,
பாவலர் எல்ல.கிருஷ்ணமூர்த்தி
வாழ்வியல் இலக்கியப் பொழில்
சிங்கப்பூர்

No comments:

Post a Comment