Sunday 13 May 2018


வாழ்வியல் இலக்கியப் பொழில் 12-05-2018-ல் 7ஆவது சந்திப்பு

"வாழ்வியல் இலக்கியப் பொழில்" அமைப்பபின் மாதாந்திர நிகழ்ச்சி (12-05-2018 அன்று 7 ஆவது நிகழ்ச்சி)
 
இலக்கிய உறவுகளுக்கு இனிய வணக்கம்,
 

சிராங்கூன் சமூக மன்றத்தில் 12-05-2018 மாலை 6.00 மணிக்கு வாழ்வியல் இலக்கியப் பொழில் அமைப்பின் மாதாந்திர நிகழ்ச்சி....

தமிழ் வணக்கப் பாடலோடு வரவேற்பு தமிழன்னைக்கு.
தாரிக தம் தஜம் தரிஜா... என்றதொரு இசைக்கு பரதநாட்டியம் ஆடி நிகழ்ச்சியை தொடங்கி வைத்தார் சுசித்நிரா. ஶ்ரீகண நாதா சிந்துர்ர... என்ற பாடலை இசைபாடிச் சென்றார் சம்ரிதா.
வந்தோரை வரவேற்று மகிழ்ந்தார் திருமதி துளசிமணி.
 
சிறுவர்கள் பங்கேற்கும் அங்கத்தில் முதலாவதாக ஜீவஜோதிகா, மூதுரையில் இருந்து  இரண்டு பாடலோடு கருத்துகளையும் கூறினார். தொடர்ந்து வந்த ஜோஷிகா, நண்பர்களிடம் எப்படி பழக வேண்டும் என்பதை அழகியதோர் நன்னெறிக் கதையைக் கூறினார். அடுத்து வந்த சர்வினி கொன்றை வேந்தன் வரிகளை வழங்கினார்.

விமல் நனரனெரிக்கதையை பாடலோடு வழங்கினார். சமிக்‌ஷா சங்க இலக்கிய நூல்களின் பட்டியலை பதினெண்மேல்கணக்கு நூல்கள், பதினெண்கீழ்க்கணக்கு நூல்கள்,
ஐம்பெருங்காப்பியங்கள், ஐங்குறுங்காப்பியங்கள் ஆகியவற்றை தொகுத்தளித்தார். காணொளி வழியாக தொடர்ந்த ஶ்ரீயா நிற்பதுவே நடப்பதுவே என்ற பாரதியார் பாடலை அழகுற பாடினார். ஆசிபா தஸ்னீம் ஆமையும் முயலும் கதையை சுவைபட கூறினார். மழலையர் பாடல்களோடு வந்த நிகிதா, அப்பா பாடலையும்,காகம் ஒன்று காட்டிலே தாகத்தோடு தவித்தது என்ற பாடலையும் சுவைபட பாடினார்.

தொடர்ந்து வந்த கௌஷிக் வாழ்க நிரந்தரம் என்ற பாரதியார் பாடலையும், அச்சமில்லை அச்சமில்லை என்ற பாடலையும் கம்பீரமாக பாடினார். பிரதக்‌ஷிதா மணியே மணியின் ஒலியே என்ற அபிராமி அந்தாதி பாடலைப் பாடினார். தொடர்ந்து வந்த தனீஸ்ராஜ் அச்சமில்லை அச்சமில்லை என்ற பாரதியார் பாடலை பாடினார். சிவானி கெடுவான் கேடு நினைப்பான் என்ற கருத்தை கதை மூலம் விளக்கினார். வாசினி சங்க இலக்கிய நூல்கள் வரலாற்றை வழங்கினார். ஶ்ரீவிகாஷ் அச்சமில்லை அச்சமில்லை என்ற பாரதியார் பாடலை பாடிச் சென்றார். அஸ்வின் அறிவுள்ள காகம், முயலும் ஆமையும், சிங்கமும் சுண்டெலியும் என மூன்று கதைகளை கூறிச் சென்றார். கௌஷிகா, ஒளிபடைத்த கண்ணனாய் வா வா என்ற பாரதியார் பாடலைப் பாடினார்.

 

சிறுவர்கள் அங்கத்தை தொடர்ந்து வந்த வாழ்வியல் இலக்கியப் பொழிலின் தலைவர் பாவலர் எல்ல.கிருஷ்ணமூர்த்தி, தமது அறிமுக உரையில் அறிவியல் பேசும் சங்க இலக்கியங்கள்என்ற தலைப்பில் தொல்காப்பியம், புறநானூறு, அகநானூறு, பரிபாடல், பதிற்றுப்பத்து, ஐங்குறுநூறு மற்றும் சிலப்பதிகாரம் ஆகிய நூல்களில் இருந்து மேற்கோள்களைக் காட்டி இப்புவியில் ஐம்பூதங்களாக குறிப்பிடுவனவற்றையும், ஓரறிவு முதல் ஆறறிவு வரை பட்டியலிட்டும் தொகுத்தளித்தார்.

 
சிறு இடைவேளைக்குப் பின் தொடங்கியவேரும் விழுதும்என்ற புதிய அங்கத்தில் திருமதி. கோமதி மற்றும் அவருடைய புதல்வன் பிரித்திவ் சேர்ந்து பழமொழியின் விளக்கமும் கழு தைக்க தெரியுமாம் கற்பூர வாசம்என்ற பழமொழி மருவி தற்போது கழுதைக்கு தெரியுமா கற்பூர வாசம்என்பது பற்றி சிறப்புற வழங்கினர்.
 

பெரியவர்கள் உரையில், மருத்துவர் திருமதி.அன்னபூரணி சிறுபஞ்சமூலம் (பாகம்-2) பாடல்களை அழகுற விளக்கினார்.  நான்மணிக்கடிகை நூலில் இருந்து சில பாடல்களை விளக்கி உரையாற்றினார் திருமதி. ராதிகா. பழமொழி நானூறு நாலில் இருந்து சில பாடல்களை விளக்கினார் திருமதி. மஞ்சுளா. முதுமொழிக்காஞ்சி நூலில் வந்த துவாப்பத்து பகுதியில் உள்ள பத்து முதுமொழி வரிகளை விவரித்தார் திருமதி. தீபிகா. ஐங்குறுநூறு நூலில் இருந்து சில பாடல்களை குறிப்பிட்டு உரையாற்றினார் திருமதி. பவித்ரா.
 
கவிதையும் கானமும் அங்கத்தில் தமிழ் மொழியைப் போற்றி தாம் வடித்த கவிதை ஒன்றை அழகுற படைத்து மகிழ்ந்தார் திருமதி. பிரபாதேவி.
 
வழக்கமான மருந்துவ குறிப்புகளுடன் வந்திருந்த கவிஞர் சாவித்திரி இந்த முறை புதியதாக மேலும் ஒருவர் பிசியோதெரபி பற்றி அறிமுக உரையாற்றி, அடுத்தடுத்த நிகழ்ச்சிகளில் செய்முறையோடு விளக்குவதாகவும் கூறிச் சென்றார்.

 
நன்றியுரை வழங்கிய திருமதி.மஹாஜபின் மறவாமல் யாவரையும் மனதார நினைவுகூர்ந்தார். அழகுற நிகழ்ச்சியை நெறிப்படுத்தி சென்றனர் திருமதி கோமதி மற்றும் திருமதி.தீபிகா.
 

தமிழில் பிறந்தாள் வாழ்த்து பாடல் பாடி இந்த மாதம் பிறந்தநாள் குழந்தைகளை மேடையேற்றி வாழ்த்துகளை தெரிவித்ததோடு நிகழ்ச்சி முடிவுக்கு வர, இனிமையாக தமிழ்க் குடும்பங்கங்கள் பல, கலந்துகொண்ட நிகழ்ச்சி இரவு சிற்றுண்டியுடன் இனிதே நிறைவுற்றது.

 

 

வாழ்வியல் இலக்கியப் பொழில் -  7 ஆவது சந்திப்பு 12-05-2018 நிகழ்ச்சியின்....

புகைப்படங்களுக்கானணைப்பு கீழே:
https://photos.app.goo.gl/mLKoKYjiOdaOOpCn1

 
காணொளியை இணையத்தில் காண ணைப்பு கீழே.
You tube link: (விரைவில் பதிவிடுவோம்)

 

வலைப்பதிவிற்காண இணைப்பு கீழே:
www.vazhviyalilakkiyapozhil.blogspot.com

 

முகநூல் பயன்படுத்துவோர் கீழ்கண்ட இணைப்பில் தங்களை இணைத்துக்கொள்ள வேண்டுகிறோம்.
http://www.facebook.com/vazhviyalilakkiyapozhil.sg

First name: Vazhviyal Ilakkiya
Last name: Pozhil Singapore

 

மேற்கண்ட இணைப்பில் சிரமம் இருப்பின்
Krishnamurthy Singapore என்ற இணைப்பில் இணைக்க விருப்பம் தெரிவிக்க இணைக்க ஏதுவாக இருக்கும்.
 

நன்றி !


மரபுடன்,
பாவலர் எல்ல.கிருஷ்ணமூர்த்தி
வாழ்வியல் இலக்கியப் பொழில்
சிங்கப்பூர்

Saturday 12 May 2018

வாழ்வியல் இலக்கியப் பொழில் 14-04-2018-ல் 6ஆவது சந்திப்பு - இலக்கியச் சங்கமம் 2018


"வாழ்வியல் இலக்கியப் பொழில்" அமைப்பபின் மாதாந்திர நிகழ்ச்சி (14-04-2018 அன்று 6 ஆவது நிகழ்ச்சி)

 

இலக்கிய உறவுகளுக்கு இனிய வணக்கம்,

 

சிராங்கூன் சமூக மன்றத்தில் 14-04-2018 மாலை 6.00 மணிக்கு வாழ்வியல் இலக்கியப் பொழில் அமைப்பின் மாதாந்திர நிகழ்ச்சி....

 

மங்கலம் பொங்க மங்கையர் கூடி மல்லிகை பூவோடு மற்ற இன மலர் சேர்த்து மகிழ்வாக வார்த்திட்ட மலரிதழ் மாக்கோலம், மணிநேரம் கடந்தாலும் மங்காத ஒளியோடும், மருதாணி கை சேர மங்கல ஒலி முழங்க மற்றுமொரு அலங்காரம் அகல் விளக்கும் சூழ வைத்தனர்.

 

ஐந்தடி உயர அழகான குத்து விளக்கை மலர்கொண்டு அலங்காரம் மல்லிகை சரம் கொண்டும் இடையிடையே சிவந்த ரோசாப்பூ நிற்க அழகோ அழகு.

 

விழாவிற்கு மேள தாளம் வைக்கவில்லை, இயற்கை அன்னை தந்தாள் இடி, மின்னல் முழக்கத்தோடு இறங்கி வந்து மழை சொரிய, வெற்று அரங்கம் வியர்க்க வைத்தது உண்மைதான், மாலை 6 மணிக்கு. தூறல் நின்றுவிட தொடர்ந்து வந்த அலையாக அரங்கம் நிரம்பியது அடுத்த இருபது நிமிடங்களில்.

 

தமிழ் வணக்கப் பாடலோடு வரவேற்பு தமிழன்னைக்கு. ரிதம்ஸ் அஸ்தெடிக் சொசைட்டி இசைப்பள்ளி மாணவர்களின் பரதநாட்டியம் பரவசம் தந்தது முதல் அங்கமாக. இசைபாடி மகிழ்வித்தார் உருகாமல் இருக்காதய்யா என்று உருகி பாடிச் சென்ற ஜீவஜோதிகா. வந்தோரை வரவேற்று மகிழ்ந்தார் திருமதி கோமதி.

 

இலக்கியச் சங்கமம் 2018 விழாவையொட்டி நடைபெற்ற மாணவர்களுக்கான போட்டியில் மழலையர் பிரிவில் முதல் இடத்தைப் பெற்ற ராஜஶ்ரீ தம் பெயருக்கு ஏற்றாற்போல் நெடுஞ்செழியப் பாண்டியன் வேடமேற்று வீற்றிருந்தார் மேடையில். தோளும் வலுத்திருக்க;

வாளும் கூர்மையாய் வாக்கிலும் தென்பட்டது.

 

தினம் தினம் திருக்குறள் பாட திருவள்ளுவராய் வந்தார் தொடக்கநிலை 1 பிரிவில் முதல் இடத்தைப் பெற்ற சானா கான். தாடியும் நீண்டிருக்கும் அவருடைய உரை வீச்சும் ஓங்கியிருந்தது.

 

தொடக்கநிலை 2 பிரிவில் முதல் இடத்தை பிடித்த நந்திகா 10 திருக்குறள்களை ஒருவரி

விளக்கத்தோடு திடமுடன் கொண்டுவந்தார். பதினைந்து திருக்குறளை ஒரு வரி விளக்கத்துடன் வழங்கினார் தொடக்கநிலை 3 பிரிவில் முதல் இடத்தைப் பிடித்த லிதர்ஸா. அழகியதோர் கதையை வழங்கினார் தொடக்கநிலை 4/5 பிரிவில் முதல் இடத்தைப் பிடித்த கவின்நிலா. சிறப்பு பங்கேற்பாக நிருதி சிலப்பதிகாரத்தில் மதுரை காண்டம் ஒரு பகுதியையும், கிஷோர் பாரதியார் கவிதையோடும் வந்து நிகழ்ச்சியை மெருகூட்டினர்.

 

 

தொடர் மழையாக வந்த சிறார்களின் இலக்கிய உரைகளை அடுத்து பெரியவர்களுக்கான அங்கத்தில் ஆசாரக்கோவை என்னும் பதினெண்கீழ்க்கணக்கு நூலில் இருந்து சிலவற்றை சுவைபட வழங்கினார் பவித்ரா கண்ணன்.

 

ஆவலோடு எதிர்பார்த்திருந்த சிறப்பு இலக்கியச் சொற்பொழிவு நடத்திட வந்திருந்த அமிர்கடேஸ்வரர் அவர்களுக்கு சிறப்பு மரியாதை செய்தார் வாழ்வியல் இலக்கியப் பொழிலின் தலைவர் பாவலர் எல்ல.கிருஷ்ணமூர்த்தி. ஒரு மணிநேரம் தமிழ் இலக்கியம் கூறும் வாழ்வியல் நெறிமுறைகள்என்னும் தலைப்பில் ஆற்றிய உரை அனைவரையும் கவர்ந்து இருந்ததது. வழக்கமான மருந்துவ குறிப்புகளுடன் வந்திருந்த கவிஞர் சாவித்திரி இந்த முறை தாம் கொண்டு வந்திருந்த மூலிகை செடிகளை பற்றிய அழகிய குறிப்புகளை தந்திருந்தார்.

 

எதிர்பார்த்து குறித்த நேரத்தில், அரங்கினுள் நுழைந்த சிராங்கூன் சமூக மன்ற ஆலோசகர் திருவாட்டி சான் உய் யூ மேடையை அடைய குத்துவிளக்கு ஏற்றி வைத்ததார். தொடர்ந்து சிராங்கூன் சமூக மன்ற இந்திய நற்பணிச் செயற்குழுவின் துணைத்தலைவர் கதிர் ஏற்றினார், அடுத்து வாழ்வியல் இலக்கியப் பொழிலின் தலைவர் தொடர்ந்து அவர்தம் மனைவி உஷா கிருஷ்ணமூர்த்தி மற்றும் சிறப்புரை வழங்கிய முனைவர் அமிர்தகடேஸ்வரர் உள்ளிட்டோர் ஏற்றினர்.

 

 

துடிப்பான கிராமிய ஆட்டத்துடன் வந்தனர் ரியா முகில், சர்வினி மற்றும் சமக்‌ஷா. முத்தான மூன்று பாடல்களை குழைத்து கொடுத்த நாட்டுப்புற பாடல் அனைவரையும் மனதளவிலும் உடலளவிலும் துள்ளாட்டம் போட வைத்தது. தொடர்ந்து வந்த கும்மியாட்ட குழுவினர் ஆட்டம் அரங்க  அதிரும் வண்ணம் கைத்தட்டலைப் பெற்றது. ஆட்டம் முடிந்து அழகிய இசைக்கச்சேரியைத் தந்தனர் ரிதம்ஸ் அஸ்தெடிக் சொசைட்டி இசைப்பள்ளி மாணவர்கள்.

 

 

பரிசளிப்பு விழாவில் மழலையர் பள்ளி மாணவர்கள் முதல் தொடக்க நிலை மாணவர்கள் என 22 பேருக்கு பரிசளிப்பு நடைபெற்றது. விழாவில் கலந்து கொண்டு சிறப்புறச் செய்த ரிதம்ஸ் அஸ்தெடிக் சொசைட்டி இசைப்பள்ளி நிர்வாகத்திற்கு ஒரு நினைவுப்பரிசையும், சிறப்புரையாற்றிய முனைவருக்கு ஒரு நினைவுப்பரிசையும் வழங்கினார் சிறப்பு விருந்தினர் ஆலோசகர். விழாவில் சிறப்பு விருந்தினராக பங்கேற்றமைக்கு ஆலோசகருக்கு நினைவுப்பரிசை வழங்கி மகிழ்ந்தார் தலைவர்.

 

நன்றியுரை வழங்கிய உஷா கிருஷ்ணமூர்த்தி மறவாமல் யாவரையும் மனதார நினைவுகூர்ந்தார். அழகுற நிகழ்ச்சியை நெறிப்படுத்தி சென்றனர் திருமதி பவித்ரா கண்ணன் மற்றும் துளசிமணி சத்தியமூர்த்தி.

 

 

வழக்கம் போல், இந்த மாதம் பிறந்தநாளை கொண்டாடியவர் ரியா முகில் அவர்களை மேடையில் ஏற்றி, கவிஞர் அறிவுமதி அவர்கள் இயற்றிய  தமிழில் பிறந்தநாள் வாழ்த்து பாடல்களை பாடி அனைவரும் தம் வாழ்த்துகளை தெரிவித்தனர்.

 

ஊடகவியலாளரான திரு மணிமாறன் அவர்களின் குழுவினர் இன்றைய நிகழ்ச்சியினையும், தொடக்கம் முதலே பதிவு செய்து வந்தனர். அவர்களின் சகோதரர் சரவணன் நிகழ்ச்சியில் வந்த பல அங்கங்களையும் கண்டு களிப்புற்றார்.  

 

தமிழ்க் குடும்பங்கங்கள் பல, கலந்துகொண்ட நிகழ்ச்சி இரவு சிற்றுண்டியுடன் இனிதே நிறைவுற்றது.

 

வாழ்வியல் இலக்கியப் பொழில் -  6 ஆவது சந்திப்பு 14-04-2018 நிகழ்ச்சியின்....

புகைப்படங்களுக்கானணைப்பு கீழே:

https://photos.app.goo.gl/3PHMuCDRUSfBp09o1

 

காணொளியை இணையத்தில் காண ணைப்பு கீழே.

You tube link:

https://youtu.be/xOsszi3l5YY


 

வலைப்பதிவிற்காண இணைப்பு கீழே:

www.vazhviyalilakkiyapozhil.blogspot.com

 

முகநூல் பயன்படுத்துவோர் கீழ்கண்ட இணைப்பில் தங்களை இணைத்துக்கொள்ள வேண்டுகிறோம்.

http://www.facebook.com/vazhviyalilakkiyapozhil.sg

First name: Vazhviyal Ilakkiya

Last name: Pozhil Singapore

 

மேற்கண்ட இணைப்பில் சிரமம் இருப்பின்

Krishnamurthy Singapore என்ற இணைப்பில் இணைக்க விருப்பம் தெரிவிக்க இணைக்க ஏதுவாக இருக்கும்.

 

நன்றி !

 

மரபுடன்,

பாவலர் எல்ல.கிருஷ்ணமூர்த்தி

வாழ்வியல் இலக்கியப் பொழில்

சிங்கப்பூர்